இலங்கையில் டெல்டா பரவக்கூடிய அபாயம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!!

உலக நாடுகளில் தற்போது பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ள டெல்டா மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று இலங்கையில் மேலும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் அடுத்தவாரத்தில் எடுக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் டெல்டா மாறுபாடான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 05 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலயைில் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

டெல்டா மாறுபாடான தொற்று ஸ்ரீலங்காவில் பரவியிருப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நாடளாவிய ரீதியில் பூகோள மட்டத்தில் எத்தனை பேருக்கு இந்தத் திரிபடைந்த தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்பது பற்றிய பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 05 தொற்றாளர்கள் இந்த டெல்டா மாறுபாடான தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் அவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு இத்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான எந்த உறுதிபடுத்தக்கூடிய தகவலும் இன்றுகாலை வரை சுகாதார அமைச்சிற்குக் கிடைக்கவில்லை.

இருந்த போதிலும் நாடு முழுவதிலும் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் பரிசோதனை நடத்துதல் என பல்வேறு முயற்சிகளை நாங்கள் நடத்திவருகின்றோம் என்றார்.

இதேவேளை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு காரணமாகவே தற்போது நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000ஐ விட குறைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *