கணவரின் தாக்குதலால் மானைவி மரணம், பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு தீ மூட்டிய கணவர்!!
இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது, கனமான பொருளினால் குறித்த கணவர் மனைவியின் தலையில் தாக்கியதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர் கோனார முதியன்சேலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தயா நிஷாந்தி ஹரிச்சந்திர ( 37 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான கணவர் ( 27 வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை,
காலியில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், அவரது கணவரால் தீ மூட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண் காவல்துறை உத்தியோகத்தரும் சம்பவத்தில் சிறு எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த பெண் உத்தியோகத்தரின் கணவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த காவல்துறை உத்தியோகத்தருக்கும், அவரது கணவருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.