2 பிள்ளைகளின் தந்தை வீதியோரத்தில் மரணம்….. விபத்தா அல்லது கொலையா என காவல்துறை விசாரணையில்!!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் வயது-33 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று  காலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த நிலையிலே,

குறித்த குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்திற்கு அருகில் இருந்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற  அடம்பன் காவல்துறையினர் விபத்தா அல்லது கொலையா?

என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *