உடல்கருகி பலியாகிய 33 பேர்….. பேரூந்தை பூட்டி தீ வைத்ததால் நிகழ்ந்தது கொடூரம்!!

மாலியில் பயங்கரவாதிகளால் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ், அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேரந்தில் 40இற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

சாங்கோ ஹெரி என்ற பகுதியில் சென்றபோது அந்த பேருந்தை இடைமறித்த பயங்கரவாதிகள் பேருந்தின் சாரதியை கொலை செய்தனர்.

இதனால்,

அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்திலிருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், பயங்கரவாதிகள் பேருந்தின் கதவுகளை மூடி அதற்கு தீ வைத்தனர்.

இந்த கோர தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 33 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இத் தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை முன்னெடுதத வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *