பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கடசிக்குமிடையே மோதல்….. பகிரங்கமாக கூறிய மைத்திரி!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது சர்வகட்சி அரசாங்கத்தையோ அமைக்க முன்வந்தபோதிலும்,

அமைக்கப்படும் அரசாங்கத்தில் அவை எதுவும் இல்லை, முன்னர் ஆட்சியில் இருந்த அதே ஆட்சிதான் தற்போதும் உள்ளது.

புதிய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *