நாட்டில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள இன்னொரு விமான நிலையம்!!
இரத்மலானை விமான நிலையம் இம்மாதம் 29ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(DV Chanaka)தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
தென்னிந்தியா மற்றும் மாலைதீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன என்றார்.
இரத்மலானை விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மேலும் பல சர்வதேச விமான நிறுவனங்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.