TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

14 மில்லியன் USD பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி….. இலங்கை மத்திய வங்கி!!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்(USD) பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், 14.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், மார்ச் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

5 Star Hote ஆகவுள்ள போகம்பர சிறைச்சாலை!!

போகம்பர சிறைச்சாலையை ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொன்மையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். போகம்பர சிறைச்சாலையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 2014 ஆம் ஆண்டு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. அந்த அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்….. பரீட்சைகள் ஆணையாளர் வழங்கியுள்ள செய்தி!!

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E. O/L – 2023) இரண்டாம் முறை விண்ணப்பித்த 10000க்கும் அதிகமானோர் தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்தை உள்ளடக்கிய பரீட்சை அனுமதி சீட்டுகளைப் பெற்றுள்ளனர் என ப‌ல்வேறான வழிகளில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவிடம் தெரிவிக்கையில், ​​ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  பரீட்சைகள் ஆணையாளர் மேலும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESTOP VIDEOS

கொடூரமாக handcuff மூலம் தன்னை தாக்கியதாக வாக்குமூலமளித்த சீவல் தொழிலாளி – ‘அவர் தானாகவே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம்’ என கூறும் போலீஸ்….. மன்னாரில் சம்பவம் (காணொளி இணைப்பு)!!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம்(02/05/2024) மாலை குறித்த நபரை அடம்பன் பொலிஸார் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் காட்டு இறைச்சி விற்பதாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி….. விலைகளில் மாற்றம் எனவும் அறிவிப்பு!!

நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை உள்ளூர் முட்டைகளின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக 40, 45 ரூபாவாகக் குறைக்கப்பட்டதாக்க கூறப்பட்ட நாட்டு முட்டையின் விலை குறைவடைந்திருந்த போதும் அண்மைய தினங்களில் நாட்டு முட்டையின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், புத்தாண்டின் போது 50 முதல் 60 ரூபா வரை நாட்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கேபிள் கார் அறுந்து விபத்து….. சிக்கிய 174 பேரின் நிலைமை என்ன!!

துருக்கியில் கேபிள் கார் அறுந்து விபத்துக்குள்ளான நிலையில் 23 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 174 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள் கார் வசதி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கேபிள் கார்களில் பயணம் செய்வதோடு 2010 அடி உயர மலை உச்சியில் உள்ள உணவகம் மற்றும் சுற்றுலா தலத்திற்கு கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொட்டித்தீர்க்கப்போகும் மழை….. வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம்(15/04/2024) 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, மேல், சப்ரகமுவ, ஊவா,தென் மாகாணங்களிலும் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் நாளை மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொட்டி தீர்க்க போகும் கனமழையா – சுட்டெரிக்க போகும் வெயிலா….. வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை Read More

Read More
FEATUREDNewsSportsTechnologyTOP STORIESWorld

அடுத்த வாரத்தில் 12 மணிநேர சூரிய கிரகணம்….. FAA இடமிருந்து விமானப் பயண எச்சரிக்கை!!

உலகின் சில பகுதிகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ள நிலையில் விமானப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க (America) அரசாங்கத்தின் ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் (FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விமானப் பயண எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமெரிக்கா, மெக்சிகோ (Mexico), கனடா (Canada) மற்றும் வட அமெரிக்காவின் (North America) பிற பகுதிகள் உட்பட பல்வேறு நாடுகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

25 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம்….. தாய்வான் மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை!!

கடந்த 25 ஆண்டுகளில் தாய்வான் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தீவுப்பகுதிகளில் தாக்கப்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாய்வானின் ஹுவாலியன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில், தாரோகோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பாதையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுவாலியனுக்கு வெளியே உள்ள ஒரு முக்கிய பள்ளத்தாக்கின் பெயரால் இந்த பூங்காவிற்கு Read More

Read More