தமிழக பள்ளிகள் நாளை தொடக்கம் பாடசாலைகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!!

நாளை தொடக்கம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறப்பதற்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என இந்திய ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்ரெம்பர் 15ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும், வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *