#prime Minister

FEATUREDLatestNewsTOP STORIES

கல்வியை கைவிட்டவர்களுக்கு இலவச தொழில்….. சிறிலங்காவில் புதிய திட்டம்!!

பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல காரணங்களால் பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்ட மாணவர்களுக்கு இலவச தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன பணித்துள்ளார். நேற்று(19/06/2023) திங்கட்கிழமை கொழும்பு மகரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு காரணங்களால் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்ட சிறுவர்கள் குறித்து முறையான அறிக்கை ஒன்றை தயாரித்து இலவச Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம்….. பிரதமர் ரணில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வர்த்தக சபைகள், திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து புதிய வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ​​மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தத்துடன், உள்ளூர் சந்தையின் தவறான நிர்வாகத்தினால் உணவுப் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார். இந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கடசிக்குமிடையே மோதல்….. பகிரங்கமாக கூறிய மைத்திரி!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read More
FEATUREDLatestNews

ரணிலால் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம்! விறுவிறுப்பாய் நகரும் அரசியல் களம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையின் அதிகாரங்களைக் குறைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே, பல கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 21வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. 21வது Read More

Read More
LatestNewsTOP STORIES

பதவி விலகினார் மஹிந்த!!

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.   சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.   நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவரது ராஜினாமா அறிவித்தல் வெளியாகியுள்ளது.   இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச அதிபர் Read More

Read More
LatestNewsTOP STORIES

பல விடயங்களுடன் நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டார் மஹிந்த….. முழுமையான விபரங்கள்

“முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்திலுள்ள இத்தருணத்தில் சமூகத்தில் உள்ள பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு இஸ்லாம் மக்களுக்காக வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாம் Read More

Read More
LatestNewsTOP STORIES

அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்…… ஜனாதிபதி கோட்டாபய!!

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வகட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  கட்சித் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முழுமையான இணக்கத்தை கட்சித் தலைவர்களுக்கு கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read More
LatestNewsTOP STORIES

கண்டியிலிருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை!!

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது. இது சுதந்திரப் போராட்டத்தின் அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது. நடைபவனியின் இறுதியில் மே 1ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணியை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

மஹிந்தவின் அழைப்பிற்கு போராடடக்காரர்கள் மறுப்பு!!

பிரதமர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள போதும், எமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பயனும் இல்லை என காலிமுகத்திடல் பங்கேற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் இங்கு வீதிக்கு இறங்கி போராடுவதற்கான முக்கிய காரணம் பிரதமருக்கு தெரிந்திருந்தால் இவ்வாறான பேச்சுவார்த்தைள் தேவைப்படாது என நாம் நினைக்கின்றோம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

Read More