#Hospital

LatestNewsTOP STORIES

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு….. மூவர் படுகாயம்!!

நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மூவர் காயமடைந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனத்தை Read More

Read More
LatestNewsTOP STORIES

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்று சிகிச்சை அளிக்க மறுத்தது பிரபல தனியார் வைத்தியசாலை….. உறுதிப்படுத்தினார் குறித்த வைத்தியசாலையின் மருத்துவர்!!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்றைதினம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை மருத்துவர் பேராசிரியர் ரணில் ஜயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு காரணமான அமைச்சர்கள் பங்குபற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாக அமைச்சர் ரணதுங்கவை கலாநிதி ஜெயவர்த்தன பார்வையிட மறுத்ததாக சமூக ஊடகங்கள் தெரிவித்தன. ஊடக நிறுவனமொன்றுக்கு தொலைபேசி ஊடாகப் பேசிய பேராசிரியர் ஜெயவர்தன இந்த ஊடகச் செய்திகளை உறுதிப்படுத்தியதுடன் எந்தவொரு நோயாளியையும் பார்க்கவோ அல்லது Read More

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அவசர அறிவித்தல்!!

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உதவ சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இதன்படி, மருந்துகளைப் பெறுவது தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்களை 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளமை Read More

Read More
LatestNewsTOP STORIES

இந்தோனேசிய அரசாங்கம் மூலம் 570 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் கிடைத்தது!!

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தோனேசிய அரசாங்கம் முதன்முறையாக 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களையும் சத்திரசிகிச்சை உபகரணங்களையும் நேற்று மாலை (28/04/2022) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவித் தொகை 3100 கிலோகிராம் எடையுடையது. இந்த மருத்துவ உதவித் தொகையில் குறிப்பாக புற்றுநோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு Read More

Read More
LatestNewsTOP STORIES

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுத் தொகையை உணவகங்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உள்நாட்டு எரிவாயுக் கொள்கலன் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயுவுடன் மேலும் Read More

Read More
FEATUREDLatestNews

மருந்துகளுக்கு தட்டுப்பாடு: சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை

சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் Read More

Read More
LatestNewsTOP STORIES

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
LatestNewsTOP STORIES

முச்சக்கர வண்டி – குளிரூட்டி வாகனம் மோதல்…… ஆபத்தான நிலையில் சாரதி!!

முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை, கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி Read More

Read More
LatestNewsTOP STORIES

காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைகள்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. அதனால் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைத்துள்ளோம். அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளுக்கான திருத்தப்படட விலைகளுடன் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி!!

அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.   அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More