#Flight

FEATUREDLatestNewsTOP STORIES

31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும்!!

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கனடாவில் சிறிய ரக விமானம் விபத்து….. இருவர் பலி!!

கனடாவின் வடக்கு ஒன்ராறியோவில் இரண்டு பேருடன் கடந்த மாதம் மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் லேக் சுப்பீரியர் மாகாண பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், மாயமான விமானம் தொடர்பில் தமது ஹெலிகொப்டர் ஒன்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் ஹெலிகொப்டர் ஒன்றும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsWorld

ஒரு கையில் குழந்தை, மறுகையில் பயணப்பை….. கேபின் கதவை அசால்ட்டாக மூடி Trending ஆகிய தாய்(Video)!!

விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது. வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

‘DHL” நிறுவனத்தின் மிகப்பெரிய விமானம் அவசரமாக தரையிரகப்படுகையில் இரு துண்டாக உடைந்தது (காணொளி)!!

விமானம் ஒன்று அவசரமாக தரையிரக்கப்பட்டபோது உடைந்து இரண்டு துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஜெர்மனியிலிருந்து வந்தது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிரகப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது. பின்னர் விமானம் தீப்பிடிக்க உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இது Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

132 பேருடன் பயணித்த சீனாவின் பயணிகள் விமானம் மலைப்பகுதியுடன் மோதி விபத்து!!

சீனாவின் பயணிகள் விமானம் ஒன்று மலைப்பகுதியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 132 பேருடன் பயணித்த China Eastern Airlines நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.   குன்மிங் (Kunming) பகுதியிலிருந்து குவாங்ஸு (Guangzhou) நோக்கி பயணித்த விமானம் , குவாங்ஸி (Guangxi) மாகாணத்திலுள்ள மலையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகின்ற அதேநேரம், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகின்றது. மிகவும் பாதுகாப்பான சேவைகளை வழங்குபவை Read More

Read More
LatestNewsTOP STORIES

மத்தளவிற்கு அபுதாபியிலிருந்து நேரடி விமானசேவை!!

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அபுதாபியிலிருந்து ஜூன் 1 ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்ட நேரடி விமானசேவை இடம்பெறவுளளதாக சிவில் விமான போக்குவரத்து, ஏற்றுமதி ஊக்குவிப்பு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் அமைந்துள்ள சில்க் ரூட் விசேட விருந்தினர் அறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மத்தள விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலிகமாக மாத்திரமே விமானங்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் ஆனால் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

அமெரிக்க விமான நிறுவனத்தின் விமானம் இலங்கைக்கு!!

இலங்கைக்கு ,அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன் தனது புதிய தயாரிப்பான Beechcraft King Air 360ER விமானத்திற்கான 11 மில்லியன் வெளிநாட்டு இராணுவ விற்பனை உடன்படிக்கையின் மூலம் வழங்கியுள்ளது. அத்துடன், அதன் தயாரிப்பு 2025 செப்டம்பருக்குள் நிறைவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன் 350ER அரச, இராணுவ மற்றும் வணிக நோக்கங்களுக்காகவும், வான்வழி ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காகவும் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில்,  ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்றுக்கொண்டது.   தயாரிப்புக்கு பின்னர் இந்த Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

பெரு நாட்டில் விபத்துக்குள்ளானது விமானம்….. 2 விமானிகள் உட்பட 7 பேர் இதுவரையில் மரணம்!!

பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரு நாட்டின் நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. அதில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் திடீரென Read More

Read More
EntertainmentLatestNewsTOP STORIESWorld

“தனது வேலை நேரம் முடிந்து விட்டது” என கூறி பாதி வழியில் விமானத்தை நிறுத்தி சென்ற விமானி!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமானத்தை, தனது வேலை நேரம் முடிந்து விட்டது என கூறி சவுதி அரேபியாவில் பாதி வழியிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமானி ஒருவர் கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்ரநஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் (PK-9754 ) ஒன்று ரியாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இடையே வானிலை மோசமடைந்ததால் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அந்த விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கினார். Read More

Read More
LatestNewsTOP STORIES

நாட்டில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள இன்னொரு விமான நிலையம்!!

இரத்மலானை விமான நிலையம் இம்மாதம் 29ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(DV Chanaka)தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். தென்னிந்தியா மற்றும் மாலைதீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன என்றார். இரத்மலானை விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மேலும் பல சர்வதேச Read More

Read More