பெரு நாட்டில் விபத்துக்குள்ளானது விமானம்….. 2 விமானிகள் உட்பட 7 பேர் இதுவரையில் மரணம்!!
பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரு நாட்டின் நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
அதில்,
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.
இந்நிலையில்,
விமானம் திடீரென விபத்திற்குள்ளானது.
விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேரும் உயிரிழந்து உள்ளனர்.