எதிர்வரும் 25 முதல் பாடசாலை நடவடிக்கைகளில் புதிய நடைமுறை….. மூன்று, இரண்டாக பிரிக்கப்பட்ட நாட்கள்!!

இலங்கையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென இலங்கையின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்,

வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்,

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 21/07/2022 திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

 

இருப்பினும்,

குறித்த திகதியினை ஒத்திவைப்பதற்கு இலங்கையின் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி,

அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 2507/2022  திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *