காலி முகத்திடல் மைதானத்தில் பாரிய போராட்டம்!!
கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்,
காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது.
எவ்வாறாயினும்,
அரச தலைவர் செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால் பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்துவோம் என தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.