LatestNews

ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் இலங்கைக்கு வந்து சேர்ந்தன!

இலங்கைக்கு தென்கொரியா நன்கொடையாக வழங்கிய 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகளும் 11 பெரிய பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் – 471 என்ற விமானத்தின் மூலம் தென்கொரியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களினால் கொரோனா பரிசோதனைகளில் தாமத நிலைமை ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *