இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சற்றுமுன் வெளியாகிய தகவல்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் மூவர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
அசை தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புறக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என்றும் மற்றைய களனி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபர் என்றும் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.