FEATUREDLatestNewsTOP STORIES

வீட்டில் பரவிய விஷ வாயு – இருவர் உயிரிழப்பு….. கொழும்பில் சம்பவம்!!

கொழும்பு (Colombo) – மாலபே பகுதியில் வீடொன்றில் விஷ வாயு கசிவினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாலபே ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (13/08/2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது,

65 மற்றும் 43 வயதான இரண்டு பேரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இரசாயன வகைகளை கலந்த போது வாயு கசிந்து இதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,

என்ன வகையான விஷ வாயு என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.

வீட்டில் விஷ வாயு பரவியிருப்பதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *