எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகளில் மக்கள் பல மணி நேரம் நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

சில இடங்களில் மக்கள் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நகர புறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் இதனை அதிகமாக காண முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்,

கொழும்பு கொடவத்தை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்றுள்ளனர்.

இந்நிலையில்,

மண்எண்ணெயை கொள்வனவு செய்ய சென்றிருந்த பெண் ஒருவர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தமையால் மயங்கி விழுந்துள்ளார்.

 

அதனையடுத்து,

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்க…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *