நாட்டில் முழுநேர ஊரடங்குச் சட்டம்! ஆராய்கிறது அரசாங்கம்
நாடு முழுவதிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் முழுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத் தரப்பு நடத்திவருவதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதிலும் இரவுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.