LatestNewsTOP STORIES

மாலுசந்தியில் ஆட்டோ – மோ. சைக்கிள் விபத்து….. 3 மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயம்!!

வடமராட்சி மாலுசந்தி வீதியில் நாய்கள் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ, மோட்டார் சையிக்கிள் விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி மாலுசந்தி வீதியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில் 3 மாணவிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் ,

மாலுசந்தியில் இருந்து மந்திகை நோக்கி சென்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையம் தாண்டி சிறிது தூரத்தில் நாய்கள் கூட்டம் வீதிக்கு குறுக்கே ஓட வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே பாடசாலை மாணவியை ஏற்றி வந்த மோட்டார் சையிக்கிளுடன் மோதி அருகில் உள்ள நீர் வடிகால் வாய்க்காலில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *