புதுப்பொலிவுடன் காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையை தொடங்கியது “யாழ் ராணி”!!

காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து இன்று(28/07/2022) முதல் புதியதொடருந்து பெட்டிகளுடன் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.

யாழ் ராணி தொடருந்தானது ஆரம்பம் முதல் இன்று வரை பழைய பெட்டிகளுடனே தனது சேவையை மேற்கொண்டுவந்தது.

இந்நிலையில்,

இந்தியாவின் உதவியுடன் யாழ் ராணி தொடருந்து புதிய பெட்டிகளுடன் தனது பயணத்தை இன்று(28/07/2022) முதல் ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, யாழ் ராணி தொடருந்தானது காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 6.00 க்கு தனது பயணத்தை தொடங்கி

முறிகண்டி வருகை தந்த தொடருந்து மீண்டும் முருகண்டியில் இருந்து காலை 8.30 க்கு காங்கேசன்துறையை சென்றடையும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நேரத்திலும் யாழ் ராணி தொடருந்து அரச உத்தியோகத்திருக்கும்

பொதுமக்களுக்கும் பெரும் சேவையை ஆற்றி வருகின்றமையால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *