FEATUREDLatestNewsTOP STORIES

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக பாரவூர்த்தி மோதியதில் பாடசாலை அதிபர் உட்பட இருவர் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உந்துருளியை பாரவூர்த்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில்,

இன்று(27/05/2022) உயிரிழந்துள்ளார்.

கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *