முடிவெடுக்க முடியாமல் நீழும் பொ.ப.ஆணைக்குழு உறுப்பினர்களின்….. மின்கட்டண குறைப்பு தொடர்பான கலந்துரையாடல்!!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(28/02/2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும்,
கலந்துரையாடலின் பின்னர் இன்று(28/02/2024) இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.