TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

காதலியுடன் சென்ற 17 வயது சிறுவனை 15 நாட்களாக காணவில்லை….. காதலியின் வாக்குமூலத்தில் சந்தேகிக்கும் உறவுகள்!!

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் கற்கை நெறியில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவனை கடந்த 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தனது 21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற போது அலையில் சிக்கியதாக மாணவனின் காதலி காவல்துறையிடம் கூறியபோதும் மாணவனின் உறவினர்கள் இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதன்படி, காலி, வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவன் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

அமெரிக்காவின் Francis Scott Key Bridge மீது மோதிய கப்பலில்….. இலங்கைக்காக அனுப்பப்பட்ட 764 தொன் அபாயகரமான வெடி பொருட்கள்!!

அமெரிக்காவின் (America) மேரிலேண்ட் மாநிலத்தில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் (Francis Scott Key Bridge) மோதி விபத்துக்குள்ளான கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 764 தொன் அபாயகரமான பொருட்கள் இலங்கை நோக்கி செல்லவிருந்த கப்பலில் இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கை (Sri Lanka) நோக்கிய 27 நாள் பயணத்தை ஆரம்பித்த சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 26 ஆம் திகதி அமெரிக்காவில் விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விசேட சுற்றிவளைப்பு….. 137 பெண்கள் அதிரடியாக கைது!!

விசேட சுற்றிவளைப்பொன்றின் போது நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்த இரு பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை இன்று(27/03/2024) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த சோதனையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் அதேவேளை, குறித்த நிலையங்களில் பணிபுரிந்த 137 பெண்களும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

சுட்டுக் கொல்லப்பட்டது 26 அடி நீல உலகின் மிகப்பெரிய பாம்பு!!

அமேசான் மழைக்காடுகளில் இருந்த உலகின் மிகப்பெரிய பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. இந்த பெரிய பாம்பானது கடந்த 24 ஆம் திகதி இறந்து கிடந்ததாகவும் இது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாம்மை அமேசான் மழைக்காடுகளில் அண்மையில் கண்டுபிடித்தனர். அனா ஜூலியா என்று அழைக்கப்பட்ட இந்த பாம்பானது 26 அடி உயரமும், 200கிலோ எடையும் கொண்டுள்ளது. இந்நிலையில், அனா ஜூலியின் 26 அடி நீளமான உயிரற்ற உடல் தெற்கு பிரேசிலின் மாட்டோ க்ரோசோ டோ சுல்(Mato Grosso Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திறந்து வைக்கப்பட்டது தெற்காசியாவின் மிகப்பெரிய “ஜேர்மன் – இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை”!!

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் காலி கராபிட்டிய பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த மருத்துவமனைக்கு ஜேர்மன் – இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை என பெயரிடப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசின் உதவியுடன் இந்தக் வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி பேரிடருக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டன. கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளமையினால், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏனைய பெண்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பரிசுப் பொருட்களை தயாரிக்க, அலங்காரம் செய்ய நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் காணொளி அறியக்கிடைத்தால்….. 2 கோடி 50 லட்சம் ரூபாய் அபராதம்!!

நாட்டில் நாணயத்தாள்களை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விளம்பரங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி(CBSL) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாணயத் தாள்களை சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பட்டப்பகலில் இளைஞனை கடத்தி சென்ற மர்ம குழு….. வெளியாகிய CCTV காட்சிகளால் பரபரப்பு!!

இங்கிலாந்தில் Bradford என்ற பகுதியில் பட்டப்பகலில் ஒரு இளைஞன் கடத்திச்செல்லப்பட்ட விடயம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிவப்பு வாகனங்தில் வந்த மூன்று பேர் வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இளைஞன் ஒருவனை பலவந்தமாக இழத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிய CCTV வீடியோக்காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவருகின்றது. Bradford இலுள்ள Westcroft Road என்ற வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது கடத்திச் செல்லப்பட்டவர் பற்றியும், கடத்தியவர்கள் பற்றியுமான தகவல்களை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்கள். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கனடாவை உலுக்கிய ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட ஆறு பேர் கொலை….. இலங்கையர்களுக்கு கனடாவில் தடையா!!

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் கனடாவில் தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்திற்கு அறிமுகமானவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலைச்சம்பவமானது கனடாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் கனடா செல்ல முயலும் இலங்கையர்களுக்கும் பெரும் அச்சத்தை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. விடுக்கப்பட்டது சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அச்சமடைந்தனர். இதை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் திருப்பதியில் குறைந்த அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது திருப்பதிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்….. சம்பவ இடத்திலேயே பலியான இளம் யுவதி!!

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது கண்டி மினிப்பே பிரதேசத்தில் நேற்று(13/03/2024) மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த உயிரிழந்த யுவதி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் எதிரே வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளார். இந்தக் கோர விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், Read More

Read More