FEATUREDLatestNewsTOP STORIES

காதலியுடன் சென்ற 17 வயது சிறுவனை 15 நாட்களாக காணவில்லை….. காதலியின் வாக்குமூலத்தில் சந்தேகிக்கும் உறவுகள்!!

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் கற்கை நெறியில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவனை கடந்த 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது 21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற போது அலையில் சிக்கியதாக மாணவனின் காதலி காவல்துறையிடம் கூறியபோதும் மாணவனின் உறவினர்கள் இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதன்படி,

காலி, வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவன் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் படிப்பில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

17 வயதான சேனுக தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக மாலையில் தனது 21 வயது காதலியுடன் காலி ஜங்கிள் பீச் சென்றது பின்னர் தெரியவந்தது.

ஜங்கிள் பீச்சில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் விழுந்ததாக குறித்த காதலி தெரிவித்துள்ளார்.

தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

எனினும்,

சம்பவம் தொடர்பில் காவல்துறையில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகாவின் உறவினர்களுக்கு காதலி கூறிய விடயம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர். இதுவரை எந்த கிரிமினல் குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *