இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல் – இது மட்டுமே வழி!!
“கொரோனாத் தொற்றிலிருந்து நாம் மீண்டெழ தடுப்பூசியே ஓர் அடைக்கலமாக உள்ளது என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை நூற்றுக்கு 51 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பத்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. அவை நாட்டின் 15 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.