கொழும்பு – கொட்டாஞ்சேனையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.