புதிய அரச விடுமுறை தினத்தை அறிவித்த அரசாங்கம்!!

அரச விடுமுறை நாட்களாக இரண்டு நாட்களை அறிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *