வங்கக்கடலில் உருவாகும் ”புரேவி” புயல்! விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு வங்க கடலின் மத்தியில் நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரேவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *