20 வயது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சட்டத்தின் முன் சரணடைந்த கணவன்!!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள மகிழடித்தீவு – காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் – மனைவி இடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை சம்பவ தினமான நேற்று(15/06/2022) அதிகாலை 4 மணிக்கு
தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது இரண்டரை வயதுக் குழந்தையைத்
தனது சகோதரியின் வீட்டுக்குக் கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் நண்பகல் 12 மணியளவில் சரணடைந்துள்ளார்.