தடுப்பூசிகளை வெளியிட சீனா தயார் ஆகிறது – ஆர்டர்கள் குவிகின்றன

தடுப்பூசிகளை விரைவில் வெளியிட சீன நிறுவனங்கள் தயாராகி வரும்நிலையில், மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன.

சீனா, உலகத்துக்கு கொரோனா வைரஸ் தொற்றை வாரி வழங்கியதோடு மட்டுமல்லாமல், இப்போது அதைத் தடுப்பதற்கு தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது அங்கு 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷியா, எகிப்து, மெக்சிகோ உள்பட 12-க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன.

இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன.

இருப்பினும் சுகாதார அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றோ, நாட்டின் 140 கோடி மக்களை எவ்வாறு சென்று அடையப்போகிறார்கள் என்றோ கூறப்படவில்லை.

இதற்கிடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் சோதனைகளை விரைவுபடுத்துகின்றனர் என்று கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *