தமிழ் மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும்!!
தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில் நடைபெற்ற 29 ஆவது தெற்கு மண்டல பேரவையின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிப்பதுடன், திருக்குறளையும் தேசிய நூலாக பிரகடனப்படுத்த வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.