புதிய வரி அறவீட்டு முறைமைகளை பிரதமர் அறிவித்துள்ளமை நம்பிக்கையளிக்கிறது….. W.A.விஜேவர்தன!!

இலங்கை மத்திய வங்கி மீதான தேவையற்ற தலையீடுகள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “அரச ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் Read More

Read more

சில பொருட்களின் இறக்குமதிகான “விசேட பண்டவரி”யானது ‘200%’ ஆக அதிகரிப்பு!!

இறக்குமதி  செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டவரியை நிதி அமைச்சு 100% வீதமாக நேற்று(01/06/2022) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது, 1000 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரிஅதிகரிப்பு!!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதி!!

மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏற்கனவே விலை உயர்த்தப்பட்ட மருந்துகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என்று NMRA தெரிவித்துள்ளது. இவ்வாறு நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டின் சகல பகுதிகளிலும் ஆர்ப்பாடங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

பால், பழம் உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட வரி….. மீண்டும் விலையேற்றம்!!

பழங்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்டுள்ளது. விசேட வரி விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம். இவ் பட்டியலில் தயிர், வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவை அடங்கும். இதேவேளை, திராட்சைகள், ஆப்பிள்கள் மற்றும் ஓரஞ்சுகள் உட்பட பல பழங்களும் இந்த பட்டியலினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சந்தையில் மீண்டும் குறித்த பொருட்களின் விலைமேலும் அதிகரிக்கும் என Read More

Read more

முடிவிற்கு வரும் வாகனதாரர்களுக்கு கொடுக்கப்படட கால அவகாசம்!!

நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கப்படும் அபராத பற்றுச்சீட்டுக்கான மேலதிக அபராதக் கட்டணம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 28 நாட்கள் வரை மேலதிக அபராத கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று விசேட நடைபெறவுள்ள கூட்டம்…… எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பால் மா, எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றைய கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma), “பல நாட்களாக உள்ள பால் Read More

Read more

இன்று முதல் பெரிய வெங்காயத்திற்கு புதிய இறக்குமதி வரி!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த வரி அறவிடும் நடவடிக்கை  அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more

இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி!!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது விசேட விற்பனை வரியை விதித்து நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது. இதற்கமைய நெத்திலி மற்றும் கருவாடு ஆகியவற்றுக்கு கிலோ ஒன்றுக்கு தலா 100 ரூபா விசேட வியாபார பண்ட வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய வரிகள்! ரத்தாகும் மற்றொரு வரி – நிதியமைச்சு வெளியிட்ட தகவல்

2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில வரிகள் இன்று முதல் அமுலாவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. தனிப்பட்ட நபர்களின் வருமானம் தொடர்பிலான வரி இன்றைய தினம் முதல் அமுலாகின்றது. கடந்த காலங்களில் தனி நபரின் வருமானம் ஒரு லட்சம் ரூபாவாக இருந்தால் வரி அறவீடு செய்யப்பட்டது தற்பொழுது இந்த வருமான எல்லை இரண்டரை லட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, சேமிப்பு வைப்புக்கள் தொடர்பில் அறவீடு செய்யப்பட்டு வந்த 5 வீத வரி இன்றுடன் ரத்தாகின்றது. பெறுமதி Read More

Read more