நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read more

ஜனாதிபதி பதவி விலகுவது ஒருபோதும் நடக்காது….. பிரதமர் ரணில் பகிரங்கம்!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் Read More

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கோ எனது தந்தைக்கோ இல்லை….. தனது Twitter பதிலில் நாமல்!!

இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கோ அல்லது தனது தந்தை மகிந்த ராஜபக்சவுக்கோ இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாமல் ராஜபக்ச அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மகிந்த ராஜபக்சவிற்கோ அல்லது எனக்கோ நாட்டை விட்டு Read More

Read more

417 மில்லியன் USD இற்கு சுவிஸர்லாந்து நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது நாட்டின் மற்றொரு தீவு!!

கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.   இதேவேளை, இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.   இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான Read More

Read more

மகிந்த உட்பட 13 பேருக்கு பயணத்தடை விதித்தது கோட்டை நீதவான் நீதிமன்று!!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகளான பதின்மூன்று (13) பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்டோருக்கு இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னa கோனுக்கும் பயணத் தடை Read More

Read more

இன்று மாலை புதிய பிரதமராக ரணில் பதவிப் பிரமாணம்….. பிரபல சிங்கள ஊடகம் தகவல்!!

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இன்று மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று Read More

Read more

இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியா விசேட நடவடிக்கை!!

வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதற்க்காக 16 படகுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து 84 நபர் இதுவரை இந்தியாவிற்கு புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ள நிலையில், மேலும் இருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்திய சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மே 12 வியாழக்கிழமை (நாளை) காலை 7 மணிக்கு நீக்கப்படுமென அரச தலைவரின் ஊடகப்பரிவு அறிவித்துள்ளது. இவ்வாறு நீக்கப்படும் ஊரடங்குச்சட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு 13 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று  காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வீதிகளில் Read More

Read more

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் Read More

Read more

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசை பொறுப்பேற்க தயார்….. அனுர குமார திசாநாயக்க!!

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “கோட்டா கோ கம“ போராட்டத்தை தவிர்த்து Read More

Read more