பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசை பொறுப்பேற்க தயார்….. அனுர குமார திசாநாயக்க!!

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கோட்டா கோ கம“ போராட்டத்தை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இடம்பெறும் வன்முறை, கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல் குறித்து துரித தீர்மானத்தை முன்னெடுக்காவிடின் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால திட்ட யோசனைகளை நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *