#IOC

FEATUREDLatestSports

ரஷிய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் மும்பையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஐ.ஓ.சி.யின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் சாசன விதிமுறையை மீறிய இந்தச் செயலில் ஈடுபட்டதால் ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடைக்கு ஆளாகி இருக்கிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்….. 6 காவல்துறையினர் படுகாயம் – பெண்கள்  உட்பட 9 பேர் கைது (காணொளி)!!

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் அத்துருகிரிய பகுதிலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது . இதன்போது, 6 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் பெண்கள்  உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஆறு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் பிரச்சினைக்காக ஜனாதிபதி  கோட்டாபய உரிய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள விசேட பணிப்புரை!!

கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.   அத்துடன், நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாடாளாவியரீதியில் மூடப்பட்டன நாற்பது எரிபொருள் நிலையங்கள்!!

வாடிக்கையாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நாற்பது எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சித்தல் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற காரணங்களை முன்னிட்டே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட எரிபொருள் கேள்வியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்திருப்பதாகவும் எரிபொருள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று நள்ளிரவில் இருந்து எ‌ரிபொரு‌ள் விலை உயர்வு!!

இன்று 23.05.2022 இரவு 12.00 மணிக்கு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் அனைத்து வகையான எரிபொருட்களுக்கும் விலை அதிகரிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.. 24.05.2022 நாளை செவ்வாய்க்கிழமையில் இருந்து புதிய விலைகள்.. 92 ஒக்டேன் ரக பெற்றோல் 420.00 95 ஒக்டேன் ரக பெற்றோல் 450.00 ஓட்டோ டீசல் 400.00 சுப்பர் டீசல் 445.00 மண்ணெண்ணெய் விலை விபரம் கிடைக்கப்பெறவில்லை.. இருப்பினும் இதுவரையில் இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சுன்னாகத்தில் எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி, சாரதி மற்றும் உதவியாளர் மீதும் கொடூர தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி மீதும் சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளார்கள் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும்….. Lanka IOC தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்!!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ‘ஆனந்த பாலித’ தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, பெட்ரோல் விநியோகம் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு….. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!!

பெற்றோல் பற்றாக்குறை காரணமாக நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும், மீண்டும் பெற்றோல் கப்பல் கொள்வனவு செய்யப்படும் வரை போதியளவு பெற்றோல் கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் பல நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள பெற்றோல் கப்பலை விடுவிக்க முடியாமல் போனதே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவுகின்ற Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எ‌ரிபொரு‌ள் விநியோகம் மீள ஆரம்பம்!!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நாடளாவிய ரீதியான எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் மீண்டும் ஆரம்பமானதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாகவும், அடையாளங்காணப்பட்ட பிரதேசங்களுக்கான எரிபொருள் விநியோகம் தற்போது இடம்பெறுவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்தது. பொலிஸ் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்த இரண்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்….. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. நேற்றிரவு நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவங்கள் காரணமாக கடந்த திங்கட்கிழமை (09) நாடளாவிய ரீதியில் Read More

Read More