#Covid19

LatestNews

அதிகரிக்கும் கொரோனா – முக்கிய அரச நிறுவனமொன்று வெளியிட்ட அறிவிப்பு!!

தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களின் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே தபால் நிலையங்கள் மற்றும் உப அஞ்சலகங்கள் திறந்திருக்கும். தற்போதைய கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், ஈஎம்எஸ் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தால் நிகழ்த்தப்படும் சர்வதேச கூரியர் சேவை, ஸ்பீட் போஸ்ட் சேவை, வெளிநாட்டு பொதிகள் சேவை மற்றும் ஸ்டாம்ப் சீலிங் மெஷின் பிரிவு Read More

Read More
LatestNews

அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் மரணங்கள் அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள்!!

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களில் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோயாளிகள் அதிகரிப்பதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அடுத்த 14 நாட்களுக்கு இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாம் என்ன செய்தாலும் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை மிக சடுதியாக அதிகரிக்கும். இதனை சுகாதார கட்டமைப்பால் தாங்க Read More

Read More
LatestNews

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளிவரவுள்ள முக்கிய அறிவித்தல்??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதன் பின்னர் நாட்டை முடக்குவது அல்லது பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது இன்றோ அல்லது நாளையோ சாத்தியமாகலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நூறிற்கும் அதிகமாகவுள்ளதை சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் பெரும் நெருக்கடி நிலையினை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து Read More

Read More
LatestNews

நான்கு வாரங்களுக்கு முடக்கப்படுமா இலங்கை??

அதிவேகமாக பரவிவரும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன, சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது என சுகாதார தரப்பு கூறியுள்ளது. அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம் 3000தை அண்மித்த தொற்றாளர்களும், Read More

Read More
LatestNews

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன Read More

Read More
LatestNews

உடனடியாக ஊரடங்கு விதியுங்கள் – அரசாங்கத்திற்கு அவசர அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே நாட்டில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வெற்றிகரமான வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS) அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார பிரிவுகளிலும், சுகாதாரத் துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது என சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு இடமளிக்கும் Read More

Read More
LatestNews

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

கொழும்பில் வசிப்போருக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு 1 முதல் 15 வரையிலானவர்களுக்கு இவ்வாறு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் வழங்கப்படும் என மாநகரசபையின் தொற்று நோய் நிபுணர் டொக்டர் தினு குருகே தெரிவித்துள்ளார். கொவிட் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தடுப்பூசி இரண்டு பக்கங்களையும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் இரண்டு பக்கங்களையும் , தொடர்பு இலக்கத்தையும்  epidunitcmc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிற்கு அனுப்பி Read More

Read More
LatestNews

வெளிவந்த அதிர்ச்சி தகவல் – இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா!!

இலங்கையில் இதுவரை 45831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு இன்று வியாழக்கிழமை பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அதன்படி, இதுவரை 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட 19688 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதோடு, 10 தொடக்கம் 18 வரையான சிறுவர்களில் 26143 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 18 வயதுக்கும் கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் இதுவரை கொவிட் Read More

Read More
LatestNews

சீன தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரபல சிங்கள நடிகைக்கு தொற்றியது கொரோனா!!

பிரபல சிங்கள நடிகை ஷலனி தாரகாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனது பேக்புக் பக்கத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தன்னுடன் நடித்த பலருக்கு தொற்று இருப்பதையடுத்து, ஜூலை 31ஆம் திகதி முதல் தாம் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், தமக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டார். மேலும், தான் சீனாவின் சினோபார்ம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் Read More

Read More
LatestNews

தீவிரமடையும் டெல்டா!! சனிக்கிழமை வருகிறது இறுதி அறிக்கை!!

கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமடைந்திருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். டெல்டா தொற்றினை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து வெளியிட்டபோது அவர் கூறியுள்ளார். இதுவரை கிடைத்த மாறுபட்ட கொரோனா தொற்றின் மாதிரிகள் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இறுதியறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More