#Covid-19 Virus

LatestNews

கரவெட்டி கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உறுதி….. நேற்றும் 07 பேர்!!

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் பாடசாலை மாணவி ஒருவருக்கும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 3ஆசிரியர்களும் இரு மாணவிகளும் உட்பட 7 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி கோட்டத்தில் இயங்கும் பெண்கள் பாடசாலையில் மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருடன் தொடுகையை மேற்கொண்டு முதலுதவி வழங்கிய ஆசிரியர்கள் இருவரும், இரு மாணவிகளும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கரவெட்டி  கோட்டத்தில் இயங்கும் ஆண்கள் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு Read More

Read More
LatestNews

12 மாணவர்களுக்கு தலை மன்னாரில் கொரோனா தொற்று!!

பனிக் குடத்துடன் வெளிவந்த குழந்தையின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு பிறவி போல. கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான கால கட்டம். இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பலர், அவர்களின் கர்ப்ப காலத்தின் இறுதி காலகட்டத்தில் அல்லது பிரசவம் நிகழ்வதற்கு முன்பாக பனிக்குடம் உடைந்து விட்டது அல்லது பனிக்குட நீர் வெளிவந்து விட்டது என்று Read More

Read More
indiaLatestNewsWorld

“ஒமிக்ரோன்” இலகுவில்எந்த இரத்த வகையை தொற்றும்…… ஆய்வு முடிவுகள் வெளியானது!!

டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை இரத்த வகைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில், AB மற்றும் B இரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி முதல் ஒக்டோபர் 4ம் திகதிவரை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2,586 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை நடத்தியது. இந்த ஆய்வில், B இரத்த பிரிவை Read More

Read More
LatestNews

விக்னேஸ்வரா ஆரம்பப் பாடசாலை, தேவரையாளி இந்துக் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பவற்றிலுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

வடமராட்சியில் அதிபர், ஆசிரியர்  மாணவிகள்,  என கல்விச் சமூகத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி விக்னேஸ்வரா ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும்  அவரின் இருபிள்ளைகளுக்கும், தேவரையாளி இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் என பலருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல பாடசாலைகள் வகுப்பறைகளின் இடவசதி மற்றும் சமூக இடைவெளிகளை கருத்தில் கொள்ளாது அனைத்து மாணவர்களையும் அழைத்து வகுப்புக்களை Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

புதிதாக விருத்தியடைந்த ஒமிக்ரோன் வைரஸின் புகைப்படம் வெளியிட்ட இத்தாலி விஞ்ஞானிகள்!!

புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரோன் கொரோனா வைரஸின் புகைப்படத்தை உலகில் முதன்முதலாக இத்தாலி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ரோமில் உள்ள Bambino Gesù குழந்தைகள் மருத்துவமனையின் விஞ்ஞானிகள் உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸின் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். வைரஸின் உருவத்தில் ஒட்டியிருக்கும் மனிதர்களின் செல்களுக்குள் நுழைய தேவைப்படும் புரதத்தில், டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸில் அதிக பிறழ்வுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இவை டெல்டா வகை வைரஸை விட அதிக ஆபத்தானவை என கருத Read More

Read More
LatestNews

கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும்!!

பண்டிகை காலப்பகுதியில் கோவிட் வைரஸ் தொற்று பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய காலப்பகுதியில் உள்ள சுகாதார வழிக்காட்டல்கள் இதற்கு முன்னர் காணப்பட்டதனை விடவும் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில், சிறு குழந்தை முதல் அனைவருக்கும் சமூக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பண்டிகை காலத்துடன் தொடர்புடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Read More
LatestNewsWorld

சூட்டப்பட்டது புதிய கொரோனா டெல்டா திரிப்பிற்கான பெயர்!!

டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளநிலையில் அதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயரை சூட்டியுள்ளது. இதன்படி அந்த வைரஸிற்கு Omicron என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கதுடன் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புதிய திரிபுடன் தென்னாபிரிக்கா, ஹொங்கொங் மற்றும் பொத்ஸ்வானா முதலான நாடுகளில் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை Read More

Read More
LatestNewsWorld

தடுப்பூசி முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் சிங்கப்பூரிக்குள் செல்லலாம்!!

கொரோனாவுக்கான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தமது நாட்டு்குள் பிரவேசிக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அடுத்த மாதம் மேலும் ஆறு நாடுகளுக்கு இதனை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்படி டிசம்பர் 14 முதல், தாய்லாந்தில் இருந்து பயணிகள் தனிமைப்படுத்தப்படாது சிங்கப்பூருக்குள் நுழையலாம். கம்போடியா, பிஜி, மாலைதீவு, Read More

Read More
LatestNews

“பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…..” – அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!!

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பொது மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்றும் பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Read More
LatestNews

கர்ப்பிணி பெண்ககளிற்கு முக்கிய எச்சரிக்கைத் தகவல்….. வைத்தியர் சித்ரமாலி டி சில்வா!!

கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட (Chitramali de Silva) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பை காண முடிந்துள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை விரைவில் Read More

Read More