கரவெட்டி கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உறுதி….. நேற்றும் 07 பேர்!!

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் பாடசாலை மாணவி ஒருவருக்கும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 3ஆசிரியர்களும் இரு மாணவிகளும் உட்பட 7 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி கோட்டத்தில் இயங்கும் பெண்கள் பாடசாலையில் மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவருடன் தொடுகையை மேற்கொண்டு முதலுதவி வழங்கிய ஆசிரியர்கள் இருவரும், இரு மாணவிகளும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல்,

கரவெட்டி  கோட்டத்தில் இயங்கும் ஆண்கள் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இன்னுமொரு உடற்கல்வி ஆசிரியரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *