#Corona

LatestNews

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read More
LatestNews

அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளது…. ஹர்ஷன ராஜகருண!!

தற்போது கோதுமை மாவு, எரிவாயு , பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகள் உயர்ந்த நிலையில் இதுவரை உயர்த்தப்படாத அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் தேர்தலை நடத்தும் முடிவு Read More

Read More
LatestNews

Covid 19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு “டிஜிட்டல் அட்டை” தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன….. ஜயந்த டி சில்வா!!

கொவிட் தடுப்பூசி பூரணமாக ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டை தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா (Jeyantha De Silva)  தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, தற்போது பூரணமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வெளிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்கு முதற்கட்டமாக  குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். < அதனடிப்படையில், QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   மேலும் டிஜிட்டல் அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது Read More

Read More
LatestNews

சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்…. Dr. அசேல குணவர்தன!!

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால், பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena)தெரிவித்துள்ளார். மக்கள் மிகவும் கவனமாக செயற்படாவிட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்றும், நாடு முழுவதும் 15 ஆம் திகதி திறக்க முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு மக்களை கடுமையாக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். Read More

Read More
LatestNews

வடமராட்சி கிழக்கில் மின்னல் தாக்கி இறந்தவருக்கும் Covid-19 தொற்று உறுதி!!

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் உள்ள வாடியில் நின்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது , இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் (வயது – 35) என்பவர் உயிரிழந்திருந்துள்ளார். அவருடைய சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More
LatestNews

நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய, நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Read More
LatestNews

இரு Dose தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று முதல் தொழிலுக்கு செல்ல முடியாது…. மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன்!!

மன்னாரில் பொலிஸ் சோதனை சாவடிகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் கொரோனா தடுப்பூசி அட்டைகளை சோதனையிடுவதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது மன்னாரில் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.   அதற்கமைய, மன்னார் மாவட்டத்தில், இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பொது இடங்களில் நடமாடுவதற்கும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே Read More

Read More
LatestNewsWorld

தடுப்பூசி ஏற்றியவர்களை விட,ஏற்றாதவர்கள் 11 மடங்கு மருத்துவமனையில் அனுமதி…. CDC பணிப்பாளர் Rochelle Walensky இன் கருத்து!!

தடுப்பூசி ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கொவிட் -19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடுமையான நோய் அல்லது இறப்புக்கு எதிராக கொவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறனை தெளிவாகக் காட்டும் ஒரு புதிய ஆய்வை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக கொவிட் 19 தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் இந்த Read More

Read More
LatestNews

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்….. காரணம் கொவிட்-19

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை Read More

Read More
LatestNews

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லை!!

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். சூடுபத்தினசேனையில் புதைப்பதற்கு எந்த விதமான பணமும் அறவிடுவதில்லை. ஆனால் குறித்த உடலத்தை எரிப்பதாயின் மன்னம்பிட்டியில் உள்ள தகன சாலைக்கு 12 ஆயிரம் கட்டவேண்டிய நிலையுள்ளது. அதனையும் கட்ட கூடிய வசதி இல்லாதவிடத்து அரசாங்கத்தினால் இலவசமாக எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்காக 40 Read More

Read More