#Corona

LatestNews

கர்ப்பிணி பெண்ககளிற்கு முக்கிய எச்சரிக்கைத் தகவல்….. வைத்தியர் சித்ரமாலி டி சில்வா!!

கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட (Chitramali de Silva) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பை காண முடிந்துள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை விரைவில் Read More

Read More
News

கடடாயமாக்கப்பட்ட்து “Covid-19 Vaccinated Record Card”!!

சுற்றுலா செல்வோர் கட்டாயம் தடுப்பூசி அட்டைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான சுற்றுல மையங்களுக்கு செல்லும் போது பூரணமாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க (Dhammika Wijesinghe) தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுற்றுலா மையங்களில் தடுப்பூசி அட்டைகளை பரிசோதனையிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். Read More

Read More
LatestNews

கொரோனாவின் அடுத்த அவதாரம்(A30)….. இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இலங்கையும் – ஹேமந்த ஹேரத்!!

உலகில் பல நாடுகள் A 30 கொரோனா வைரஸ் திரிபு குறித்து  கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். இந்த திரிபை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து Read More

Read More
LatestNews

“Booster” தடுப்பூசி இன்று (01/11/2021) முதல் வழங்கப்படுகின்றது!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தில் இன்று (01) முதல் பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றி 6 மாதங்கள் கடந்தோருக்கே பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக சுகாதாரத்துறை, முப்படையினர், பொலிஸார், விமான நிலைய ஊழியர்கள், சுற்றுலாத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை வழங்கப்படுவோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனிடையே, நேற்று 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே பெரும்பாலானோர் தொற்றுடன் Read More

Read More
LatestNews

ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று…… மஹிந்த ஜயசிங்க!!

ஆரம்ப பிரிவு  பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் (Mahinda Jayasinghe) குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார். தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், மாணவர்களும் ஆசிரியர்களும் பலவந்தமான அடிப்படையில் அதிபர்களினால் பாடசாலைகளுக்கு Read More

Read More
LatestNews

“டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு வைரஸ்” பரவக்கூடிய நிலை இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது!!

மிக மோசமான டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு வைரஸ் இலங்கையில் பரவக்கூடிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன ( Dr. Padma Gunarathne) தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், ஏனைய கொரோனா வைரஸ் திரிபுகளைப் Read More

Read More
LatestNews

97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர். பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென Read More

Read More
LatestNewsWorld

7வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது போல….. வீட்டுப்பாடம் கொடுப்பதையும் ரத்துசெய்ய புதிய சட்டம் வகுக்கவுள்ள சீனா!!

சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்ததைப் போலவே தற்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பாடசாலை குழந்தைகளுக்கு இணைய வசதிகள்  மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பாடசாலைகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக Read More

Read More
LatestNews

பொது போக்குவரத்து சேவையை நிறுத்துங்கள்…. வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்!!

கொவிட் -19 தொற்றை கணிசமாக கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்,விசேட (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Read More
LatestNews

பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More