ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று…… மஹிந்த ஜயசிங்க!!

ஆரம்ப பிரிவு  பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர்மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், மாணவர்களும் ஆசிரியர்களும் பலவந்தமான அடிப்படையில் அதிபர்களினால் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *