#Corona

LatestNews

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை (Mobile vaccination centers) விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். உடல்நலக்குறைவினால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், COVID ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. கடந்த சில நாட்களாக அடையாளங்காணப்பட்டுள்ள COVID நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால், தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் அது Read More

Read More
LatestNews

தடுப்பூசியினால் “டெல்டா”வை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது! வைத்தியர் எச்சரிக்கை!!

தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் அப்பணியாகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஜ்சித் சுட்டிக்காட்டினார். ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் படிப்படியாக சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தொற்றின் நிலைமையை கருத்திற்கு கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை தளர்த்துவது அல்லது நீடிப்பது குறித்து அறிவிக்கப்படும். Read More

Read More
LatestNews

இலங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

இலங்கையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள டெல்டா வைரஸ் பரவல் தொடர்பிலேயே மக்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

மாகாணங்களுக்கு இடையேயான பயண தடை – விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!!

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அத்தியாவசிய சேவை மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். இந்த நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சித்தமைக்காக 900 க்கும் மேற்பட்டோர் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேல் மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பொலிஸார் தொடர்ந்து வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று, 413 வாகனங்களில் 928 பேர் Read More

Read More
LatestNews

மேலும் பல சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளியானது சுகாதார வழிகாட்டி!!

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மேலும் சில துறையினரின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார வழிகாட்டியும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்த புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மிருக Read More

Read More
LatestNews

யாழ். வல்வெட்டித்துறையிலும் அதிகரித்து வரும் ஆபத்து!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று மேலும் 40 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  40 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மூன்று நாள்களில் 88 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ். பருத்தித்துறை பகுதியிலும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் – ஆசிரியர்களின் படுமோசமான செயற்பாடு!!

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களும் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருத வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமாகும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று Read More

Read More
LatestNewsWorld

2 L அமெரிக்க டொலர் மற்றும் 2 L அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் பெறப்போகும் இலங்கை!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைப் பெறுவதற்குத் தகுதிபெற்றிருக்கும் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர கூறியிருப்பதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு அவசியமான உபகரணங்கள் Read More

Read More
indiaLatestNews

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளில் “எய்ட்ஸ்” கூறுகளா? விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்துள்ளார். இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இதுதொடர்பான விடயம் பத்திரிக்கை ஒன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும். Read More

Read More
LatestNews

பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!!

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் Read More

Read More