மீண்டும் குறையும் எரிவாயு விலை….. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் குறைக்கப்படவுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், Read More

Read more

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது….. லிட்ரோ நிறுவம்!!

கையிருப்பு வரும் வரை வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக 07 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு தாங்கிய கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிலையில், விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் Read More

Read more

எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கிறது!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை Read More

Read more

லிற்றோ நிறுவனம் வழமைபோன்று விநியோகம் தொடரும் என அறிவிப்பு!!

லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு வழமை போன்று தொடரும் என நிறுவனத்தின் பேச்சாளர் சிங்கள ஊடகெமொன்றுக்கு தெரிவித்தார். பராமரிப்பு பணிகளுக்காக தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், சிலிண்டரிலிருந்து வாயு வெளியேற்றம் சாதாரணமாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும், விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna,) லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாயுக்களால் வெளிப்படும் துர்நாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘மெர்காப்டன்’ என்ற Read More

Read more

முல்லைதீவில் சற்றுமுன் பதிவானது முதலாவது வெடிப்பு சம்பவம்!!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அருகில் யாரும் இல்லாததனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய Read More

Read more

இதுவரையில் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவு….. அமைச்சர் லசந்த அழகியவண்ண!!

இலங்கையில் கடந்த ஆறு வருடங்களில் மாத்திரம் லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஆகியவற்றின் எரிவாயு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் இன்று இந்த விடயத்தை தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துரித நடவடிக்கை எடுத்து மக்களை அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு Read More

Read more

இன்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்ட்து சீமெந்து, கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலை – இலங்கை மக்களுக்கு விழுந்த பேரிடி!!

சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கான புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இதற்கமைய கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை இன்று (11) அதிகாலை முதல் 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர். எனினும், 100 Read More

Read more

அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!!

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajabaksha) தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையே நேற்று நீக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அவற்றுக்கான புதிய விலைகள் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more