#Accident

FEATUREDLatestNews

தமிழர் பகுதியில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் இருவர் பலி

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் சொகுசு வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(6) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சொகுசு வாகனத்தில் பயணித்த கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர். கனரக Read More

Read More
FEATUREDLatestNews

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த அவலம்

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே மின் கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளார். குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

உலகை உலுக்கிய Super fast – Coromandel அதிகவேக தொடருந்துகளின் மோதல்….. வெளியாகின உண்மை விபரங்கள்!!

ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி Coromandel அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி Super fast அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு-ஹவுரா தொடருந்து நேற்று முன்தினம்(02/06/2023) இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் தொடருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் தொடருந்தின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட தொடருந்தின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அந்த Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இந்தியாவில் பாரிய புகையிரத விபத்து….. இதுவரை 207 பேர் பலி – 900க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

இந்தியாவின் ஒடிசாவில் மூன்று புகையிரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு புகையிரதம், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு புகையிரதம் மீது Read More

Read More
FEATUREDLatestNewsTechnology

முகமாலையில் மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளியது அரச பேருந்து….. ஒருவர் பலி – இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று(24/05/2023) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று(24/05/2023) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட பாரிய விபத்து!!

கவனக்குறைவால் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து பாதுக்க-கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கு பின், உந்துருளி விபத்து நடந்த இடத்தில் இருந்து 98 மீட்டர் தூரம் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டது அருகில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.  

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

23 பேருடன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது பேருந்து!!

பன்விலை ஆடை தொழிற்சாலைக்கு 20 பெண்கள் உட்பட 23 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று(20/01/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதாக பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மடுல்கலை ஆடை தொழிற்சாலைக்கு உனனகலை பகுதியிலிருந்து பெண்களை ஏற்றிச் சென்றபோதே குறி்த்த குடைசாய்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாரதி உட்பட எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லையென்றும், அவர்கள் அனைவரும் மடுல்கலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மதுபோதையில் தள்ளாடிய அம்புலன்ஸ் வண்டி….. மூன்று முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்து – மூவர் படுகாயம்!!

மதுபோதையில் நோயாளிகாவு வண்டியை(Ambulance) செலுத்தியதன் காரணமாக ஹட்டன் அளுத்கம பகுதியில் முச்சக்கரவண்டிகளுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த நோயாளிகாவு வண்டியானது டிக்கோயா பகுதியில் இருந்து ஹட்டன் நகரை நோக்கிச்சென்றது.   அவ்வேளை, இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி, Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கியின் விமானம்!!

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம் ஒன்று நேற்று(04/07/2022) விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கி விமான சேவைக்கு சொந்தமான 330 ரக சரக்கு விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியேயின் இஸ்தான்புல்லில் இருந்து சரக்குடன் 330 ரக சரக்கு விமானம் நேற்று(04/07/2022) இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் 45 மெற்றிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று(04/07/2022) இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு புறப்படுவதற்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மண்டான் – குஞ்சர்கடை வீதியில் மோ.சைக்கிள் விபத்து….. ஒருவர் மரணம் – ஆபத்தான நிலையில் 17 வயது மாணவன்!!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மண்டான், கரணவாய் மேற்கு, பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. மேலு‌ம், இவருடன் பயணித்த சிவகுமார் கலையொளி (வயது 17)  என்பவருக்கும் ஒரு கால் முடிவடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக Read More

Read More