அடுத்து பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணமும் அதிகரிப்பு!!
பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்துச் சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி (Harischandra Premasiri) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரித்த அவர்,
பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு தற்போது அறவிடப்படும் மாதாந்த தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும்.
அத்துடன்,
கிராமப் புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 ரூபா தொடக்கம் 300 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை,
அரசாங்கம் போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரித்தால் பெற்றோரின் வாழ்க்கைச்சுமை மேலும் அதிகரிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது பாடசாலைகளுக்கு வழமையாக மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ள சூழலில் மாணவர்களது போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.