விரைவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸியின் சக்திவாய்ந்த சாதனம்!

ஏப்ரல் 28 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற இருப்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதில் புதிய கேலக்ஸி புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

முன்னதாக கேலக்ஸி புக் ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் ப்ரோ 360 போன்ற மாடல்களின் ரென்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது கேலக்ஸி புக் மாடல் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இத்துடன் கேலக்ஸி புக் கோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் ஏஆர்எம் சார்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *