LatestNews

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் இரண்டு பவுசர்கள் மடக்கிப்பிடிப்பு

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படும் இரண்டு பவுசர்களை பொலிசார் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

55,000 லீற்றர் எண்ணெயுடன் இரண்டு பவுசர்களை டன்கொட்டுவ பொலிசார் இன்று தடுத்து வைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சதேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பவுசர்களே இவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய்இதுவரை சந்தைக்கு விடப்படவில்லை என்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதிப்படுத்தினார்.

இறக்குமதி செய்த தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *