கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் நேற்றைய தினம் 14 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஆண்கள் எனவும் 10 பேர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,211 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் நாட்டில் 7 கொவிட் மரணங்கள் பதிவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் இது இரட்டிப்பாகி உள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 595,657 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *