எந்த சூழ்நிலையிலும் பதவி விலகப் போவதில்லை….. ஜனாதிபதி கோட்டாபய!!

எந்த வகையிலும் அரச தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அரச உயர் மட்ட அதிகாரிகள் சிலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அரச தலைவர் இதனைக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதன்போது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே தான் செயற்படுவதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.

 

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மக்கள் கொழும்பு காலிமுகத் திடல் உட்பட நாட்டின் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

அரச தலைவர் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகிச் செல்ல வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

 

இவ்வாறான நிலையிலேயே பதவி விலகப் போவதில்லை என்று அரச தலைவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *